/* */

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்

குமாரபாளையத்தில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்
X

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்

குமாரபாளையத்தில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.டிராக்டர் ஓட்டுனர் தப்பியோடினார்.

குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நேற்று இரவு 08:30 மணியளவில், கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. பிரிவு சாலை பகுதியில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து, கரும்புகள் சாலையில் கொட்டின. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, டிராக்டர் ஓட்டுனர் யாரும் இல்லாததும், அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது. கரும்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர் குறித்தும், விட்டுவிட்டு ஓடிய ஓட்டுனர் குறித்தும் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றுக்கு சாக்கடை கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள,பழைய சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டு, தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள சாக்கடை இடிக்கப்பட்டு, தற்போது அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலைய சாலை உள்ளே ஆவரங்காடு பகுதி அதிக மக்கள் உள்ள பகுதி என்பதாலும், ஊரின் மையப் பகுதியாக இருப்பதாலும் அதிகளவு அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் திருச்செங்கோட்டில் இருந்து மாற்று பாதையில் வரும் வாகனங்கள், ஆவரங்காடு பகுதியில் இருந்து காவல் நிலையம் சாலை வழியாக ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே குறுகிய சாலையில், வாகனங்கள் எதிர்திசையில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சுபாஷ் நகர் என்ற பகுதி அருகே ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, திருச்செங்கோடு சாலையிலிருந்து வாகனங்கள் சுபாஷ் நகர் வழியாக சென்று பள்ளிபாளையம் காவிரி பாலம் அருகே உள்ள மாற்று வழியில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டில் இருந்து ஒரு வாகனங்கள் எப்போதும் போல காவல் நிலைய சாலையிலிருந்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு பெரும் பகுதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 14 Feb 2024 4:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...