வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி

வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி
குமாரபாளையத்தில் வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் வட மாநில தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.

குமாரபாளையத்தில் வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் சோனப்பூர் மாவட்டம், பசோணி பகுதியை சேர்ந்தவர் ஜுபராஜ் ஹரிபால் (வயது 42.) இவரை அதே ஊரை சேர்ந்த திலிப் தாண்டியா, (26,) என்பவர், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் உள்ள, தான் பணியாற்றும் மில்லில் பணியில் சேர்க்க நேற்றுமுன்தினம் குமாரபாளையம் அழைத்து வந்தார்.

நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தயாரான போது, ஜுபராஜ் ஹரிபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மில் மேலாளர் வசம் கூற, மில் வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்டிய போது, வழியில் அவர் இறந்து விட்டார் என்று டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பணியில் சேர்ந்த முதல் நாளே வட மாநில தொழிலளி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Similar Posts
வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி
வாய்க்காலில் தண்ணீர் திருட்டு; குழாய்களை அகற்றிய அதிகாரிகள்
ஓட்டல், தாபா, தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
குமாரபாளையம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தூய்மையே சேவை நிகழ்ச்சி’
சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்..!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாத்திர வியாபாரி  உயிரிழப்பு!
பெருமாள் கோவில்களில்   சிறப்பு வழிபாடு..!
இந்துக்கள் பகுதியில் மசூதி :  பொதுமக்கள் எதிர்ப்பு..!
குமாரபாளையம் அரசு கல்லூரி மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை
குமாரபாளையம்; அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது:   225 மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா