டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
X

படவிளக்கம் : குமாரபாளையம் அருகே டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையம் அருகே டிவைடரில் மோதிய அரசு பேருந்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. நேற்று மாலை 04:00 மணியளவில் சேலம், கோவை சாலையில் வாகனங்கள் மேலும் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கி.மீ.தூரம் நின்றது. நேர ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது, காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில், சேலத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றறது. இதனை விரைவில் சரி செய்து, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த போக்குவரத்து பாதிப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது.

குமாரபாளையம் கத்தேரி பிரிவில் விபத்து பள்ளம் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், இவைகளில் சேர மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. . மேலும் மிக முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களால் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்து பள்ளங்களை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி சாலையை கடக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture