9ம் வகுப்பு தமிழ் தேர்வில் நீர் நிலைகள் குறித்த கேள்விக்கு பொதுமக்கள் பாராட்டு

9ம் வகுப்பு தமிழ் தேர்வில் நீர் நிலைகள் குறித்த கேள்விக்கு பொதுமக்கள் பாராட்டு
9ம் வகுப்பு தமிழ் தேர்வில் நீர் நிலைகள் குறித்த கேள்விக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குமாரபாளையம் விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேளாங்காடு பகுதியில் பண்ணை குட்டை அமைக்க அப்பகுதி விவசாயிகள் பெருமுயற்சி செய்து வருகின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தற்போது, அதிகாரிகளின் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. இது போன்று நீர் நிலைகளின் முக்கியத்துவம் குறித்து,இளைய தலைமுறைகளுக்கு தெரிவிக்கும் வகையில், 9ம் வகுப்பு தமிழ் தேர்வில் நீர் நிலைகள் குறித்த கேள்வி, வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளனர். இது போன்ற விழிப்புணர்வு இளைய தலைமுறையினருக்கு அவசியம் தேவை. இந்த கேள்வியை இடம்பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள். இது போல் பயனுள்ள கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற வைப்பதால், இளைய தலைமுறையினருக்கு பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம் :
9ம் வகுப்பு தமிழ் தேர்வில் நீர் நிலைகள் குறித்த கேள்விக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
படவிளக்கம்:
விஸ்வநாதன், விவசாயி, குமாரபாளையம் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu