/* */

சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் சாவு: விவசாயிகள் சோகம்

பவானி, சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் சாவு: விவசாயிகள் சோகம்
X

பவானி, சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்த 7 ஆடுகள்.

சித்தோடு கங்காபுரம், வேட்டையன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, 40, ராமன், 35. விவசாயிகள். இவர்கள் தங்கள் வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த தெரு நாய்கள் கூட்டம் கட்டிவைத்திருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் சம்பவ இடத்திலேயே 7 ஆடுகள் உயிரிழந்தன. 3 ஆடுகள் காயமடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் திரண்டு நாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் தயிர்பாளையம் வி.ஏ.ஒ. செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார்.

மேலும் ஆடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 1 Oct 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்