/* */

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் பிடிபட்ட குற்றவாளி சுரேஷ் உடன் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. முருகேசன்.

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் சுந்தரம் காலனி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், போலீசாரை கண்டதும் டூவீலரில் திரும்பியவரை பிடித்தனர். அவர் டூவீலரில் வைத்திருந்த 2 வெள்ளை நிற சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா ஆகியவை தலா 15 கிலோ வீதம், 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை கைது செய்து, ஹோண்டா ஆக்டிவா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 1 May 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...