குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் நகராட்சி.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக அரசு சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் 2 நாட்கள் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு யாரும் தாக்கல் செய்யவில்லை.

தை அமாவாசை நாளில் மக்கள் நீதி மய்யம், தி.மு.க., சுயேச்சை, சி.பி.எம் உள்பட 13 பேர் தாக்கல் செய்தனர். நேற்று தி.மு.க. 8, அ.தி.மு.க. 5, சி.பி.ஐ. 1, காங்கிரஸ் 1, சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் என மொத்தம் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாளை தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
the future of ai in healthcare