குமாரபாளையத்தில் 2 ஆம்னி கார்கள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

குமாரபாளையம் காவல் நிலையம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், 48. மாவு மில் தொழில். இவர் தனது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ஜூன் 4 இரவு 08:00 மணியளவில் தனது ஆம்னி காரில் சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ உட்கார, பின்னால் சதீஷ்குமார் மற்றும் அவரது தாயார் பார்வதி, 36, ஆகியோர் கோவை சென்று சிகிச்சை செய்து, வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
சேலம் கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் இருந்து வேகமாக சாலையின் குறுக்கே சாலையை கடக்க முயன்ற ஆம்னி கார், இவர்கள் வந்த கார் மீது மோதி ஓட்டுநர் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர்.
சுந்தரம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பார்வதி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் ஓட்டுநர் இடைப்பாடியை சேர்ந்த மாதேஸ், 36, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu