/* */

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த தொடர் மழை: வியாபாரிகள் கலக்கம்

குமாரபாளையத்தில் 2 மணி நேரமாக பெய்த தொடர் மழையால் மக்கள் கூட்டமின்றி வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த தொடர் மழை: வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையம் பகுதியில் பெய்த மழை.

குமாரபாளையத்தின் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

மேலும் ஆயூதபூஜை, விஜயதசமிக்கு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர். நகரில் ஆங்காங்கே வாழை, பூ, பொரி, பூஜை பொருட்கள் உள்ளிட்டவவைகள் விற்பனை செய்யும் கடைகள் என தற்காலிகமாக அதிகளவில் அமைக்கபட்டுள்ளன.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆகியவற்றில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப சாலையோர துணிக்கடைகளில் துணிமணிகள் வாங்கும் நபர்களும் வாங்கி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த வியாபாரம் தற்போதுதான் சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரமில்லாமல் தவிப்புக்கு ஆளாகினர்.

Updated On: 14 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?