நகர்புற உள்ளாட்சித்தேர்தல்: குமாரபாளையத்தில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

நகர்புற உள்ளாட்சித்தேர்தல்:  குமாரபாளையத்தில் 13 பேர் வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தை அமாவாசை நாள் என்பதால் குமாரபாளையத்தில் இன்று 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஜன. 28 முதல் வேட்புமனு தாக்கல் செய்திட தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெற அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தும் வெள்ளி, சனி இரு நாட்களும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்று தை அமாவாசை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் நீதி மய்யம் 10, தி.மு.க. 1, சி.பி.ஐ. 1, சுயேச்சை 1, ஆக 13 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

எஸ்.ஐ.க்கள் மலர்விழி, முருகேசன், நந்தகுமார், சிவகுமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் பலர் தங்கள் கூட்டணி கட்சியினருக்கு சீட் பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி அலுவலகம் நுழைவு பகுதியில் கிருமிநாசினி மருந்து, வெப்பமானி ஆகியவற்றை வைத்து நகராட்சி அலுவலகத்திற்குள் செல்லும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!