/* */

மாநில அளவிலான கபடி போட்டி-நாமக்கல் மாவட்ட அணி முதலிடம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் பிரிவு கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி முதல் பரிசை வென்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், ஈரோடு, கோவை, சேலம், கரூர், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 45 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வண்ணத்தமிழ் அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் அணி இரண்டாம் பரிசும், வேலூர் மாவட்டம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் மூன்றாம் பரிசும், தஞ்சை மாவட்டம் நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு விழாக்குழுவினர் ரொக்க பணமும் சுழற்கோப்பையும் வழங்கினர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் வீரர்கள் ஒருவருக்கொருவர் திறமையாக விளையாடி புள்ளிகளை பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 9 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு