ராகவேந்திரர் கோவிலில் ஆன்மிக பெருவிழா

X
By - Nandhinis Sub-Editor |28 March 2025 4:00 PM IST
அக்கியம்பட்டி, ராகவேந்திரர் கோவிலில் கோமாதா பூஜை நடைபெற்றதில் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்
ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை – பக்தர்கள் பெரும் திரளாக தரிசனம்
சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குரு ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. காலை கோமாதா பூஜையுடன் தொடங்கிய இந்த ஆன்மிக நிகழ்வில், குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மூலவர் குரு ராகவேந்திரர் உட்பட லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 24 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த பக்தி நிறைந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu