/* */

நாமக்கல்லில் டாக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா, பரிசோதனைக் கூடம் மூடல்

நாமக்கல்லில் கொரோனா பரிசோதனைக் கூடததில் பணியாற்றி டாக்டர் உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையொட்டி ஆய்வகம் மூடப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் டாக்டர் உள்பட 5 பேருக்கு  கொரோனா, பரிசோதனைக் கூடம்  மூடல்
X

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு மே மாதம் கொரோனா தொற்று கண்டறியும் ஆர்.டி. பி. சி. ஆர். ஆய்வகம் தொடங்கப்பட்டது. தினசரி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி மாதிரிகள் இங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வரும் டாக்டர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆய்வகம் அதிரடியாக மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆய்வகம் மூடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் எடுக்கப்படும் சளி மாதிரிகள், கோவை மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்து, பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Updated On: 10 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்