4 புதிய நூல்களுடன் புத்தக வெளியீட்டு விழா

நாமக்கல்லில் சிறப்பு நூல் வெளியீட்டு விழா –நான்கு புதிய புத்தகங்கள் அறிமுகம்
நாமக்கல்லில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், நான்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா, நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள சர்வம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.
விழாவில், சிறுவர் பாடல்களை கொண்ட 'கவிபாரதி' நூல், ஓய்வு பெற்ற நீதிபதி குகன் எழுதிய 'புதிய குறள்கள் – 1' மற்றும் 'மாணவர்களுக்கு 100' நூல்கள், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் படைப்பாக உருவான 'டிக் டிக் பென்சில்' (சிறுவர் பாடல்கள்) நூல், மேலும் ஆசிரியர் வீரராகவன் எழுதிய 'டமால் டமால் பட்டாசு' என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூல்களை வெளியீட்டு விழாவில் மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் சரவணன், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வீரராகவன், வாழவந்தி அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கனகராஜ் மற்றும் சர்வம் அறக்கட்டளை நிர்வாகி ரம்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல்களை மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என பலரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த நிகழ்வு, கல்வி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு கட்டமாக அமைந்துள்ளதாக அனைவரும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu