சரக்கு அடிக்க பணம் தராததால் ஆத்திரம் ! தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சரக்கு அடிக்க பணம் தராததால் ஆத்திரம் !    தந்தையைக் கொலை செய்த மகன் கைது
X

பைல் படம்

சரக்கு அடிக்க பணம் தராததால், ஆத்திரம் அடைந்து, தந்தையை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

சரக்கு அடிக்க பணம் தராததால், ஆத்திரம் அடைந்து, தந்தையை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள நத்தமேட்டை சேர்ந்தவர் காராள கவுண்டர் (85), விவசாயி. அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது மகன் முருகேசன் (53), மருமகள் சசிகலா மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசனை, குடும்பத்தினர் தர்மபுரியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 3 மாதம் சிகிச்சை முடித்து, கடந்த, ஜனவரியில் ஊர் திரும்பினார். ஆனாலும், குடியை விட முடியாமல், மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இன்று அதிகாகாலை 6 மணிக்கு, முருகேசன் தனது தந்தையிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், கீழே கடந்த மரக்கட்டையை எடுத்து, அங்கு படுத்திருந்த தனது தந்தை காராள கவுண்டரை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காராளக்கவுண்டர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், மோகனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
தாலுக்கா அலுவலகத்தில்   முத்தரப்பு பேச்சுவார்த்தை
வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம்
சரக்கு அடிக்க பணம் தராததால் ஆத்திரம் !    தந்தையைக் கொலை செய்த மகன் கைது
வேளாண் பட்ஜெட் தயாரித்துவிட்டு விவசாயிகளிடம்    கருத்துக்கேட்பது கண்துடைப்பு : விவசாயிகள் சங்கம்
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
ஒரு டீ கடன் கொடுக்காததால் டீக்கடையில் போலீஸ் ரெய்டு !    போலி போன் கால் மூலம் போலீசாருக்கு தலைவலி !
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்    கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கல்
சித்த மருத்துவரை கத்தியுடன் மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பணியிடம்
மேட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளி    ஆண்டு விழா கோலாகலம்
ப.வேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு
காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் ஆங்கில பயிற்சி