/* */

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 447 வார்டுகளுக்கு இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல்
X

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 709 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 1,078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள, 447 வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஜன.28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

நேற்று 3ம் தேதி நாமக்கல் நகராட்சியில் 59 பேரும், இராசிபுரம் நகராட்சியில் 23 பேரும், திருச்செங்கோடு நகராட்சியில் 56 பேரும், கொமாரபாளையம் நகராட்சியில் 72 பேரும், பள்ளிபாளையம் நகராட்சியில் 17 பேரும் என ஒரே நாளில் 227 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 147 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 5 நகராட்சியில் உள்ள 153 வார்டுகளுக்கு இதுவரை 374 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் 294 வார்டுகள் உள்ளன. நேற்று ஆலாம்பாளையத்தில் 23 பேரும், அத்தனூரில் 15 பேரும், எருமப்பட்டியில் 31 பேரும், காளப்பநாய்க்கன்பட்டியில் 29 பேரும், மல்லசமுத்திரத்தில் 17 பேரும், மோகனூரில் 19 பேரும், நாமகிரிப்பேட்டையில் 27 பேரும், படைவீட்டில் 25 பேரும், பாண்டமங்கலத்தில் 17 பேரும், பரமத்தியில் 27 பேரும், பட்டணத்தில் 23 பேரும், பிள்ளாநல்லூரில் 29 பேரும், பொத்தனூரில் 17 பேரும், ஆர். புதுப்பட்டியில் 38 பேரும், சீராப்பள்ளியில் 37 பேரும், சேந்தமங்கலத்தில் 8 பேரும், ப.வேலூரில் 53 பேரும், வெங்கரையில் 30 பேரும், வெண்ணந்தூரில் 17 பேரும் என ஒரே நாளில் மொத்தம் 482 பேர் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 222 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 294 வார்டுகளுக்கு இதுவரை 704 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 447 வார்டுகளுக்கு இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Updated On: 4 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!