/* */

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
X

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் அமைந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு எண்ணெய், சிகைக்காய், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வடைமாலை சார்த்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தயிரால் அபிஷேகமும் நடைபெற்றது.

இதனையடுத்து முக்கிய நிகழ்வாக, 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடந்து மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமானோர் ஆஞ்சேநேயர் சுவாமியை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Updated On: 1 Jan 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...