/* */

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி

நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி
X

முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 10 முகாம்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் பகுதியில் முகாமில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரிக்கு அமைச்சர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

முகாமில், தங்கவைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம், சின்னநரியங்குடி, கருவேளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர், பால், தார்ப்பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது கனமழை நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய பாப்பாக்கோவில் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனுக்கு அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர், சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

Updated On: 29 Nov 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...