/* */

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
X

தலைமைச்செயலகத்தில். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில், பொதுப்பணித் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது முதன்மைத் தலைமைப்பொறியாளர் விஸ்வநாத், தலைமைப்பொறியாளர் ராமச்சந்திரன், துணைத் தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பொதுப்பணித்துறையின் பல்வேறு அறிவிப்புகள், அதனை செயல்படுத்திய விபரம், நிலுவையிலுள்ள திட்டங்களை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திட்டங்கள், விரைவுப்படுத்த வேண்டியது தொடர்பாக இன்று காலையில் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவை, நிலுவையிலுள்ளவையின் விபரங்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள். இந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது அனைத்தும் விபரமாக கேட்டறிந்தார் அமைச்சர். இத்திட்டங்களை உடனடியாக ஆணை பிறப்பித்து பொது மக்களின் பயன்படுத்த தக்க வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் இதைப்போல, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் எந்த பணியிலும் காலதாமதம் இருக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது விஸ்வநாத் முதன்மைத் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் ராமச்சந்திரன், தலைமைக் கட்டிட கலைஞர் மைக்கேல், துணை தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்குப் பெற்றனர்.

Updated On: 18 Oct 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  3. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  4. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  6. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  7. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  10. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை