/* */

பணி நீக்கத்தால் விரக்தி: குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் தற்கொலை

பணி நீக்கம் செய்யப்பட்ட சோகத்தில், குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பணி நீக்கத்தால் விரக்தி: குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் தற்கொலை
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள்தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் சொல்வது, வீடுகள் தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்துத்தர அறிவுறுத்துவது போன்ற வேலைகள் இவர்களது பணிகளாகும்.

கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம், ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டு, வேறு நபர்களுக்கு அந்த பணி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் அந்த பணியை தங்களுக்கே வழங்க வேண்டும் என, பெண்கள் நால்வரும் கோரி வந்தனர்.

இந்த நிலையில், வேலை போனதால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை, நதியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Sep 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்