மயிலாடுதுறையில் குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு காரணமாக மக்கள் ஏமாற்றம்

மயிலாடுதுறையில் குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு காரணமாக மக்கள் ஏமாற்றம்
X

மயிலாடுதுறையில் தடுப்பூசி பற்றாகுறை காரணமாக ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

மயிலாடுதுறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள காலை 7மணி முதலே வரிசையில் காத்திருந்த ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 21 நபர்களுக்கு மட்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்று மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மயிலாடுதுறையில் மக்கள் காலை 7 மணி முதலே 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 250பேர்க்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டதால் பலமணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture