/* */

மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் அவதி

மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் அவதி
X

மயிலாடுதுறையில் உள்ள ஒரு தெருவில் பாதாள சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு 4ம் நம்பர் புதுத்தெருவில் ஆள்நுழைவு தொட்டியிலிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடந்து செல்ல முடியாது வாகனத்தில் சென்றால் தான் சாக்கடையை மிதிக்காமல் வீட்டிற்கு செல்ல முடியும். அதிக அளவில் தேங்கியுள்ள சாக்கடை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கடுமையாக துர்நாற்றம் வீசுவதால் வாந்திபேதி ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக கூறும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அருகாமையில் உள்ள 32வது வார்டடில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடை நீர் வழிந்தோடி மழைநீர் வடிகாலில் கலந்து ஓடுகிறது. இதேபோல் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் வீதிகளில் குளம்போல் தேங்கி தொற்று நோய் பரவி வருகிறது.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தற்காலிக நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.தமிழக அரசு மயிலாடுதுறை நகராட்சியில் வாழும் பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாத்திட பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மயிலாடுதுறை நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 23 Nov 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு