/* */

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு

மயிலாடுதுறை, கீரனூரில் தலையில் தேரை தூக்கி நூதன வழிபாடு.

HIGHLIGHTS

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில்  தூக்கி நூதன வழிபாடு
X

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு செய்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம், கீரனூரில் பழமையான அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக் கோயில்களில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு உற்சவம் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த தேர் திருவிழா மற்ற கோயில்களை போல் அல்லாமல், நூதன முறையில் தேரினை தலையில் தூக்கி 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஊர் ல்லையான வயல் பகுதியை சுற்றிவந்து மீண்டும் கோவிலை அடைவார்கள். விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 1 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...