/* */

தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்: துரை வைகோ பேட்டி

தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறியதால் தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என துரை வைகோ கூறியுள்ளார்

HIGHLIGHTS

தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்:  துரை வைகோ பேட்டி
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ 

மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமத்துவம், சமுதாய ஒற்றுமை இருக்கிறது. வடக்கே என்ன நடக்கிறது என்று மக்களுக்கும் தெரியும். மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் என்று சொல்லக்கூடாது பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது வன்முறை கூடாது. அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசு ஒதுக்கீடு 800 மெகாவாட் வராத காரணத்தாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கோடைகாலத்தில் மின்பயன்பாடு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த தருணத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படுகிறது.

தமிழக அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். நிலக்கரி இறக்குமதி சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு. கோடைகாலங்களில் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்பதை அறிந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விலை உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவிகிதம் நிலக்கரியை கொண்டுதான் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவந்து மத்திய பல்கலைக்கழக்கங்களுக்கு மட்டும் என்று கூறி ஏழை, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும். நீட் போன்று உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி கண்டனம் தெரிவித்து வருகிறோம். பாஜகவின் மக்கள் விரோத பொய்பிரச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

Updated On: 24 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...