Begin typing your search above and press return to search.
சீர்காழியில் கடன் பிரச்சினையால் தாய்,மகன் தூக்கிட்டு தற்கொலை
சீர்காழியில் கடன் பிரச்சினையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தியாகராஜன் நகரில் வசித்து வருபவர் காமராஜ். அவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி (50), மகன் ராமு (28) .
கொரோனாவால் காமராஜுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை காமராஜ் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டிலிருந்த மனைவி சாந்தி, மகன் ராமு ஆகிய இருவரும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காமராஜ் சீர்காழி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.