/* */

நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டம்

தினக்கூலி ரூ. 420 -ஆக உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.400 வழங்க ஒப்புக்கொள்ளப் பட்டது

HIGHLIGHTS

நகராட்சி   ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டம்
X

சீர்காழி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுத்தொழிலாளர்கள்  

சீர்காழி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அலுவலக நுழை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் 70 -க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். நகரில் உள்ள 24 வார்டுகளில் குப்பையை சேகரிப்பது மற்றும் அவற்றை தரம் பிரித்து உரமாக்குவது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர்.

இதற்காக நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் ஊதியமாக வழங்கபட்டு வருகிறது. இதனை 420 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, நகராட்சி அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 24 Aug 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...