/* */

மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை பகுதியில் மழை நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கி அழுகிய  நாற்றுகளை  காட்டும் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மழை விட்டு கடந்த இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் விவசாயிகள் மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர் வாராததால் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடவு செய்யப்பட்ட சம்பா நாற்றுகளும், நட்ட பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளது. மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால் பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நாற்றுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வடிகால்கள் தற்காலிகமாக தூர் வார வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Nov 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்