சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கல சுறா

சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கல சுறா
X

பழையாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மூன்று வயது அரிய வகை திமிங்கல சுறா.

சீர்காழி அருகே பழையாரில் 3 வயது அரிய வகை திமிங்கல சுறா ஒன்ற இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது துறைமுக பகுதியில் 5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் திமிங்கல சுறா இறந்து மிதந்துள்ளது.

அதனை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததுடன் கடலோர காவல் துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த திமிங்கல சுறா கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் மிகவும் அரிய வகையை சார்ந்தது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் மூலம் திமிங்கல சுறாவை பிரேத பரிசோதனை செய்து வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ai marketing future