/* */

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்
X

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை வளம், மண் வளம், சுற்றுச்சூழலை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியாக காவிரிக்கரையோரம் ஆயிரம் பனை விதைகளை நடும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து காவிரி ஆறு சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆற்றுப்படுகையில் பனை விதைகளை நடும் முயற்சியில், ஜோதி பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்பினர் இன்று மயிலாடுதுறை நகரபகுதி காவிரி ஆற்றின்; கரை ஓரத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் அமைப்பின் தலைவர்சேகர் தலைமையில், தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்கம், ஸ்ரீஜெயின்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பின் இந்த முயற்சியில் பொதுமக்களும் தன்னார்வத்துடன் பங்கேற்று பனைமர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 Aug 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...