/* */

அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, திருப்பத்தூர், பெரம்பலூர் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
X

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இன்று அத்திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், தலைமை மருத்துவர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப்குமார் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 23 Aug 2021 7:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...