/* */

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
X

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள சாலியர்களுக்குச் சொந்தமான கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் 18-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும், மாங்கல்ய பலம் வேண்டியும், வாழ்வு வளம் பெற வேண்டும் என குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில், விநாயகர் பூஜை, மகாலெட்சுமி பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், திருவிளக்கிற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை, கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்