/* */

மயிலாடுதுறை அருகே மழை விட்டும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் மழை விட்டு 5 நாட்களாகியும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே மழை விட்டும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனை
X

சேதம் அடைந்த பயிர்களை காட்டும் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை நேரத்தில் கடந்த 31ம் தேதி முதல் 2ம்தேதி காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மழை விட்ட பின்னர் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள மழை நீரை வடியவைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி கிராமத்தில் வயலில் சாய்ந்த சம்பா பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி 5 நாட்களுக்கு மேலாக தண்ணீரில் கிடப்பதால் 50 ஏக்கருக்குமேல் சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் வேதனையடைந்துளனர். தங்கள் பகுதியில் உள்ள பட்டவர்த்தி வாய்க்கால் 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு தொடர் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டும் விவசாயிகள் பட்டவர்த்தி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் கிராமத்தில் வேளாண்மைதுறையினர் உறிய முறையில் கணக்கீடு செய்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில் பட்டவர்த்தி வாய்க்கால் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதிபெற்றவுடன் விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தனர்.

Updated On: 6 Jan 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்