/* */

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.5,000 அபராதம்

மயிலாடுதுறையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.5,000 அபராதம்
X

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்;பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கால்நடை உரிமையாளர்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து, நாளை முதல் மாடு, குதிரை போன்ற வீடுகளில் கட்டிவைத்து பராமரிக்காமல், சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள் கோசாலைகளில் அடைக்கப்படும்.

அவ்வாறு கால்நடைகளை அவிழ்த்துவிடும் கால்நடை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கும் என நகராட்சி ஆணையர் பாலு தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!