/* */

வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...
X

வெளிநாட்டில் இறந்த கணேஷ்.

மயிலாடுதுறை 1-வது புதுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு 24-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் 29-ம் தேதி உயிரிழந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் மயிலாடுதுறையில் உள்ள கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார். உடனடியாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Updated On: 1 May 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க