/* */

மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

மயிலாடுதுறை அருகே மழையால் கதிருடன் சாய்ந்த பயிர்களை விவசாயிகள் சோகமுடன் எடுத்து பார்க்கிறார்கள்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் பல்வேறு இடங்களில் சாய்ந்து இந்த மழையால் நீரில் மூழ்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா வில்லியநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர், பட்டவர்த்தி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழையால் பயிர்கள் சாய்ந்துள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்தால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுக தொடங்கிவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கடந்த முறை போல இடுபொருட்கள் வழங்காமல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 Jan 2022 4:08 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!