/* */

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழி பகுதியில் அ.தி.மு.க. அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு
X

சீர்காழி அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி ,மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி, உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 1 Feb 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...