/* */

மயிலாடுதுறையில் விதியை மீறி வியாபாரம் 4 கடைகளுக்கு அபராதம்

மயிலாடுதுறையில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் விதியை மீறி வியாபாரம்  4 கடைகளுக்கு அபராதம்
X

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 10மணிமுதல் அதிகாலை 4மணிவரை ஊரடங்கும் ஞாயிற்றுகிழமைகள் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில்

நேற்று முதல் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மதியம் 12மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளான இன்று மயிலாடுதுறையில் நகராட்சி துறை சுகாதார அதிகாரிகள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

12மணிக்கு கடைகள் மூடப்பட்ட நிலையில் முதலியார் தெரு , பட்டமங்கல தெரு, கிட்டப்பா அங்காடி பகுதிகளில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் 12 மணிக்கு மேல் கடை ஷட்டரை இறக்கி வைத்துக்கொண்டு வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். அரசின் கொரோனா வைரஸ் முன்னேச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 7 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!