Begin typing your search above and press return to search.
மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
மதுரை புதுஜெயில் ரோடு முரட்டன்பத்திரி மெயின் வீதியை சேர்ந்தவர் தீபா (வயது38.) இவர், மதுரைகோட்ஸ் பாலம் தெற்குப் பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள், தீபா அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர் .
இந்த சம்பவம் குறித்து, அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.