/* */

விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு

சோழவந்தான் அருகே மனைவியை கல்லால் தாக்கி காென்றுவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு
X

கொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 30. அவரது மனைவி பாண்டியம்மாள் வயது 23. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தையும் 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர் .

பெருமாள் டிரைவராக வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், பாண்டியம்மாள் தோட்டத்தில் தக்காளி பறித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெருமாள் பாண்டியம்மாள் தலையில் கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில், நிலைகுலைந்த பாண்டியம்மாள் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 March 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்