/* */

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி, கீழப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மயானத்துக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக் குழுவினரிடம் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை பணிகள் முறையாக நடந்து வருகிறது. விரைவில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அப்போது, துணை வட்டாட்சியர் தெய்வேந்திரன், வருவாய்ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாகஅலுவலர் ஜோதிராஜ், ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.

Updated On: 15 Jan 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!