/* */

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு மதுரை அருகே அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட்  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் உசிலம்பட்டியைச்சேர்ந்த ஜெயராமன் என்பவரும் ஒருவர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஜெயராமனுக்கு மக்கள் அதிகார அமைப்பினர் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியதோடு, மணிமண்டபம் அமைக்கவும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க கோரியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனுக்கு இன்று மதுரை மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்களால் நினைவு தினம் ஆரியபட்டியில் அனுசரிக் கப்பட்டது.

முன்னதாக, ஜெயராமன் திரு உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் அதிகார அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து, ஜெயராமனுக்கு சொந்த ஊரான ஆரியபட்டியில் மணிமண்டபம் அமைத்து தர வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டனை பெற்று தரகோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Updated On: 22 May 2024 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  2. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  4. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  5. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  6. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  7. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்
  9. ஆரணி
    ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
  10. ஈரோடு
    கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்