/* */

சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து காெண்டு தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்
X

சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயில் பிரதோஷ விழாவில், பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில், பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள் ரவி, பரசுராம், ஐயப்பன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை, தக்கார் இளமதி, எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல், திருவேடகம் ஏடகநாதர் கோயில், சட்டநாதர் சித்தர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மேலக்கால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

Updated On: 16 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு