/* */

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த 5 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட 5 புரோக்கர்கள்.

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு, பெண்கள் நல அமைப்பினரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர்களான ரமேஷ், சக்தி சரவணன், கார்த்திக், குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த இரு இளம்பெண்களை மீட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. மேலும், 5 புரோக்கர்களையும் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அவர்களிடமிருந்து சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On: 4 Aug 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!