/* */

உசிலம்பட்டி கண்மாய் கரையில் பதுக்கிய கஞ்சா: போலீஸார் பறிமுதல்

உசிலம்பட்டி கண்மாய் கரையில் பதுக்கிய கஞ்சா: போலீஸார் பறிமுதல்
X

உசிலம்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதை பொருள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கண்மாய் கரை அருகே பதுக்கியிருந்த கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் போலீஸாருக்கு, உசிலம்பட்டி ஹவுசிங் போர்டு அருகே, கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் அருண்குமார், போலீசாருடன் தீவிர சோதனை செய்ததில், ஹவுசிங் போர்டு கண்மாய்க்கரை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த, பாலு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, கஞ்சா சுமார் 17 கிலோ பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 27 Sep 2021 2:55 PM GMT

Related News