வாடிப்பட்டியில், வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..!

வாடிப்பட்டி, வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி.
வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள் சௌந்திரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலையில் தலைவராக முத்துமணி, துணைத் தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்களாக சிவராமன், காசிநாதன் பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக் குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலெட்சுமி சான்றிதழ் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ் மற்றும் முத்த. வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu