/* */

விக்கிரமங்கலம் அருகே கோவில் விழாவில் கிடாய் முட்டு விழா: வென்ற கிடாய்களுக்கு பரிசு

உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடந்த விழாவில் மதுரை, தேனி, சிவகங்கை ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு

HIGHLIGHTS

விக்கிரமங்கலம் அருகே கோவில் விழாவில் கிடாய் முட்டு விழா: வென்ற கிடாய்களுக்கு பரிசு
X

விக்ரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  நடந்த கிடாய் முட்டுவிழா.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு விழா நடைபெற்றது.

உயர்நீதிமன்ற அனுமதி பெற்று தகுந்த பாதுகாப்புடன் நடைபெற்ற விழாவில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.75 அடி , அதாவது முட்டுக்கள் முட்டி களத்தில் நின்றால் சரி பாதி என பரிசுகள் அறிவிக்கப்பட்டது .வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பித்தளை பானை மற்றும் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், கிடா முட்டு சங்கத்தலைவர் வீரசிங்கம், முத்துப்பாண்டி, பவித்திரன், விஜயன், ராம்கி, கேப்டன், குன்ராஜா அஜித் சுஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்புளிச்சான்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர். செக்கானூரணி காவல் ஆய்வாளர் சிவசக்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 27 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  4. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  6. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  7. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  8. JKKN
    உலக இரத்த கொடையாளர் தின கொண்டாட்டம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  10. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி