/* */

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்கவுள்ளனர்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது
X

மதுரை கோமதிபுரம், திருக்குறள் வீதியில் தேங்கியுள்ள மழைநீர்:

மதுரையில் பலத்த மழை: கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. மதுரையில், பெரியார் பஸ்நிலையம், சிம்மக்கல், முனிச்சாலை, கீழவாசல், கோரிப்பாளையம், புதூர், கடச்சனேந்தல், திருப்பாலை, கருப்பாயூரணி, மேலமடை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை மேலமடையில் பலத்த மழையின் காரணமாக, கழிவுநீரானது, சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் வீடுகளுக்குள் புகுந்தது.மருதுபாண்டியர் தெரு, அன்புமலர் தெரு, காதர் மொய்தீன் தெருக்களிலும், கழிவு நீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கி நின்றது. கோமதிபுரம் தாழை வீதி, திருக்குறள் வீதிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Updated On: 24 Oct 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்