Begin typing your search above and press return to search.
உசிலம்பட்டி அருகே குருபூஜை மற்றும் சிவன் சிலை நிறுவ அடிக்கல் நாட்டு விழா
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குருபூஜை மற்றும் 21 அடி சிவன் சிலை நிறுவஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
HIGHLIGHTS
உசிலம்பட்டி அருகே, குருபூஜை மற்றும் 21 அடி சிவன் சிலை நிறுவஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, நல்லுதேவன்பட்டி கிராமத்தில் உள்ள அகஸ்தியர் குருகுலத்தில், இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி மற்றும் 21அடி சிவன் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவசேனா கட்சியின் தேனி மாவட்டத் தலைவர் குரு ஐயப்பன் மாநிலச் செயலாளர் முனீஸ்வரன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இணை அமைப்பாளர் நாட்ராயன் மற்றும் சிவசேனா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.