/* */

மதுரை அருகே கோழி பண்ணையில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு

செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக. தனியார் கோழி பண்ணையில் தீ விபத்து: நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு.

HIGHLIGHTS

மதுரை அருகே கோழி பண்ணையில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு
X

செக்கானூரணி அருகே தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தன.

செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக. தனியார் கோழி பண்ணையில் திடீரென தீ விபத்து: நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்த பரிதாபம்:

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில், இரண்டு கூரை அமைக்கப்பட்டு சுமார் 4500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து, மின்சாரம் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாகவும் மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென தீ பற்றி மளமளவென்று எரிந்தது.

இதனால், அங்கு பணியில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து, சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித கிலியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், கறிக்கோழி வளர்ப்பவர்கள் ஏற்கனவே, நலிவடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகளால் மேலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கறிக்கோழி வளர்ப்பு நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 April 2022 8:22 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்