/* */

சேடப்பட்டியில் பெண் சிசு கொலை: பெற்றோர் கைது

சேடபட்டியில் பெண் சிசுக் கொலையில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேடப்பட்டியில் பெண் சிசு கொலை: பெற்றோர் கைது
X

மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கட்டளையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மூன்றாவது மகள் பிறந்த ஆறு நாட்களுக்குள்ளேயே இறந்து போனது சம்பந்தமாக, சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்கு ப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், மேற்படி சிசுவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், உத்தரவிட்டார்.

அதன்பேரில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்படி சிசுவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பிணக் கூராய்வு செய்ததில் சிசுவின் தலையின் மீது ஏற்பட்ட காயத்தினால் சிசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மேற்படி சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா ஆகியோரை சேடபட்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில், சிசுவின் தாயாரான கௌசல்யா என்பவர் தனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தங்களால் சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் மேற்படி பெண் குழந்தையின் தலையை சுவற்றில் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, மேற்படி, சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 3 Jan 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!